திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... திருப்பத்தூர் அருகே சோகம்!

 
suicide

திருப்பத்தூர் அருகே திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருக்கும், தோரணம்பதி பகுதியை ஆறுமுகம் என்பவரது மகள் ஸ்ரீமதிக்கும் (19) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஸ்ரீமதி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த  சி நாட்களுக்கு முன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீமதி கணவரிடம் கோபித்துக்கொண்டு தோரணம்பதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். 

tirupattur gh

இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஸ்ரீமதி நேற்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 5 மாதத்தில் ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.