குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - கணவர் மீது வழக்குப்பதிவு
மானாமதுரை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வண்ணான் ஓடை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். தொழிலாளி. இவருக்கு, காளையார்கோவில் அடுத்த மறவமங்கலத்தை சேர்ந்த கொங்கன் மகள் வாசுகி(30) என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே, தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் வாசுகி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த வாசுகி கடந்த 31ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாசுகியின் தந்தை கொங்கன் அளித்த புகாரின் பேரில், வாசுகியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பாலமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரைண மேற்கொண்டு வருகின்றனர்.