தென்காசி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

 
 suicide

தென்காசி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தென்காசி  மாவட்டம் கடையநல்லூர் இந்திரா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் நாகமணி. கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி(20). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில, கடந்த சில நாட்களாக நாகமணி சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நாகமணிக்கும், அவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

tenkasi ttn

இதனால், கணவரிடம் கோபித்துக்கொண்டு ராஜேஸ்வரி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும், கணவரின் செயலால் வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட வந்த ராஜேஸ்வரி, நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஸ்வரிக்கு திருமணம் ஆகி 2 வருடங்களே ஆவதால் இந்த சம்பவம் குறித்து தென்காசி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.