பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோவில் கைது!

 
rape

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அவருக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவிக்கு, பாப்பானூர் கிராமத்தை சேர்ந்த பிரவீன்குமார்(19) எனற் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது.

pocso

இந்த நிலையில், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பிரவீன்குமார் அவரை பாலியல்  வன்கொடுமை செய்துள்ளார். இதனை தொடர்ந்து, மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், அவருக்கு கொலை மிட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், பிரவீன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.