வேலூர் அருகே காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

வேலூர் அருகே காதலி பேச மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள செம்பராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சரக்குமார்(27). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அந்த பெண், சரத்குமாருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி மூர்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

vellore

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மூர்த்தியை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் திருவலம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.