’’குட் நியூஸ்..நீங்க அப்பாவாக போறீங்க..’’ -டாக்டர்கள் சொன்னதை கேட்டு கணவர் அதிர்ச்சி!

 
ப்க்

 திருமணமாகி ஒன்றரை மாதம் தான் ஆகிறது.  ஆனால் மனைவியோ 4 மாத கர்ப்பமாக இருப்பதால் அதிர்ச்சி அடைந்த கணவர் போலீசில் சென்று புகார் அளித்திருக்கிறார்.  வயிற்றுவலி என்று மனைவி சொன்னதால் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது தான் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில்  மகாராஜ்கஞ்ச்.  இப்பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்திருக்கிறது. தற்போது திடீரென்று மனைவி வயிற்று வலி என்று சொன்னதை அடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.  அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள்,   அப்பெண் நான்கு மாத கர்ப்பமாக இருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறார்கள்.

ட்ந்

’’குட் நியூஸ்..நீங்க அப்பாவாக போறீங்க..’’என்று சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் எனக்கு திருமணமாகி ஒன்றரை மாதம் தான் ஆகிறது என்று சொல்ல,  அதன் பின்னர்  மருத்துவர்களுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்திருக்கிறது.   அப்படி என்றால் திருமணத்திற்கு முன்னரே அந்த பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட கணவர்,  உடனே  பெற்றோரை வரச் சொல்லி விவரத்தை எடுத்துச்சொல்லி,  அப்பெண்ணை தங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் நேரடியாக போலீசில் சென்று புகார் அளித்துள்ளனர்.

 திருமணமாகி ஒன்றரை மாதம் தான் ஆகிறது.  திருமண பந்தத்தில் இன்னும் முழுமையாக ஈடுபடவில்லை .  அப்படி இருக்கும்போது என் மனைவி நான்கு மாத கர்ப்பமாக இருக்கிறார் . பெண்ணும் பெண் வீட்டாரும் எங்களை ஏமாற்றி விட்டார்கள்.  அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதை மறைத்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.  இந்த பெண் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருக்கிறார்.

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.