நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 11,539 பேருக்கு கொரோனா

 
india corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 13,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று  11,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 43பேர் இறந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 332 ஆக அதிகரித்துள்ளது. 

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12,783  பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  4 கோடியே 37 லட்சத்து 12 ஆயிரத்து 218 ஆக உயர்ந்தது . நாட்டில் தற்போது  99,879 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 26 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 209 கோடியை தாண்டியுள்ளது.