ஒடிசாவில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 12 பேர் பலி!

 
accident

ஒடிசா மாநிலத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 

ஒடிசா மாநிலம் திகபண்டி பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பெர்காம்பூர் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஒரு பேருந்தில் சென்றனர். நேற்று அங்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்ட இன்று அதிகாலை சொந்த ஊருக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். திகபகண்டி-பெர்காம்பூர் சாலையில் வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த ஒரு பேருந்தும், இவர்களது பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கோர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.