2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - மேற்கு வங்கத்தில் 14 ரயில்கள் ரத்து

 
train

மேற்கு வந்த மாநிலத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால் 14 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்கம் மாநிலம் பன்குரா பகுதியில் 2 சரக்கு ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.  காரக்பூர் -பாங்குரா ஆட்ரா வழித்தடங்களில் செல்லும் ரெயில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்துள்ளது.   இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இந்த விபத்தின் காரணமாக் கரக்பூர்-பங்குரா-ஆத்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் குவிந்துள்ள மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு சரக்கு ரயில்கள் நெருக்கு மோதி விபத்துக்குள்ளான சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து 14 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முழு ரெயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி சேதங்களை சரி செய்ய 8 மணி நேரம் தேவைப்படும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதனால், பாங்குரா வழித்தடத்தில் இயக்கப்படும் 14 ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தென்கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும், 3 ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்படுவதாகவும், 2 ரெயில்கள் பாதி தூரத்துக்கு இயக்கப்படுவதாகவும் தென்கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது.