157 நர்சிங் கல்லூரி, 38,000 ஆசிரியர்கள் : பட்ஜெட் -2023ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..

 
157 நர்சிங் கல்லூரி, 30ஆயிரம் ஆசிரியர்கள்  :  பட்ஜெட் -2023ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..

 

2023 - 24 ஆம் ஆண்டுக்கான  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவரங்களை வெளியிட்டு வருகிறார். பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் கூறிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்..  

  •  நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்.   
  •  பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள்.
  • பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு ₹79,000 கோடியும், கட்டமைப்பு திட்டங்களுக்கு ₹10 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
  • ரயில்வே துறைக்கான   ₹2,40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 9 மடங்கு அதிகம்..  
  • 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும். 

நர்சிங் மாணவர்கள்

  • கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளர்ப்புக்கு முன்னுரிமை அளித்து  விவசாய கடன் இலக்கு ₹20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்!  
  • கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ₹5,300 கோடி வழங்கப்படும்.  
  • 9.6 கோடி சமையல் எரிவாயு கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன, 47.8 கோடி ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.  
  • இ-கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்திற்கு ₹7000 கோடி ஒதுக்கீடு! கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்