பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் பலி!!

 
tn

இமாச்சல பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

Death

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் குலு பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில்  16 பேர் உயிரிழந்துள்ளனர்.  கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் சிக்கியதால் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் பலியாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து குலு  துணை ஆணையர் அசுதோஷ் கார்க் கூறும்போது , பள்ளி குழந்தைகள் மற்றும் பிற பயணிகளுடன் தனியார் பேருந்து இன்று காலை சயிஞ்  நோக்கி சென்று கொண்டிருந்தது.  அப்போது கட்டுப்பாட்டை இழந்து திடீரென குலு பகுதியில் உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.  விபத்து சரியாக காலை 8.30 மணிக்கு நடந்துள்ளது.  இதில் பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் உள்ளூர் மக்களும் உதவி வருகிறார்கள் இந்த பேருந்தில் சுமார் 40 மாணவர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன" என்றார்.

tn

இதுகுறித்து பிரதமர் மோடி , ஹிமாச்சல பிரதேச மாநிலம் குலுவில் நடந்த பேருந்து விபத்து நெஞ்சை உருக்குகிறது. இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் பிரிந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் வழங்குகிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.