சூரத்தில் பேக்கேஜிங் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து; 2 பேர் உடல்கருகி உயிரிழப்பு!

 
surat

சூரத்தில் இயங்கி வந்த தனியார் பேக்கேஜிங் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடோதரா பகுதியில் தனியாருக்கு சொந்தமான பேக்கேஜிங் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு நேர பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று 4:30 மணி அளவில் தொழிற்சாலையின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

fire

தீ மளமளவென பரவுவதைக் கண்டு அச்சம் அடைந்த தொழிலாளர்கள் விரைந்து மேல் மாடிக்கு சென்று மாடியில் நின்றபடி உயிரை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளனர். விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், கிரேன்களின் உதவியுடன் 125 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். எனினும், 2 பேர் தீ விபத்தில் சிக்கிய உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தரப்பில், கட்டிடத்தின் முதல் தளத்தில் திடீரென தீ பற்றியதாகவும் தீ மளமளவென பரவி மற்ற தளங்களுக்கும் பரவியதாகவும் விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.