பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி.. உத்தராகண்டில் சோகம்..
உத்தராகண்ட் மாநிலத்தில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டம், லால்தாங் பகுதியில் இருந்து நேற்றிரவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பெண்கள், குழந்தைகள் உள்பட 46 பேர் அந்த பேருந்தில் பயணித்துள்ளனர். மலை மாவட்டமான பவுரியில் உள்ள சிம்ரி என்கிற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. அப்போது பேருந்து பல முறை உருண்டதால் அதில் இருந்த மக்கள் அலறி துடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மலை கிராமத்தினர் அளித்த பேரில் காவல்துறையினர் மற்றும் பேரிடர் மேலாண்மை படையினர் விரைந்து வந்தனர். இரவு நேரத்திலும் தொடர்ந்த மீட்பு பணியினால், 21 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக் டிஜிபி அசோக் குமார் தெரிவித்தார். பின்னர் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் இந்த விபத்தில் உடன் நசுங்கியும் 25 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.