காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு : 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்..
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற என்கவுண்ட்டரில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹாலன் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அத்துடன் என்கவுண்ட்டரில் உயிரிழந்த ராணுவ வீரர்களிடம் இருந்து 4 , ஏகே-47 ரக துப்பாக்கிகளை பயங்கரவாதி ஒருவர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று ( ஆகஸ்ட் 4 ம் தேதி ) இரவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.