வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை.., பிஎஃப் பங்களிப்பு அதிகரிப்பு. - இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய தொழிலாளர் விதிகள்..

 
வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை: இன்று முதல்  அமலுக்கு வருகிறது புதிய தொழிலாளர் விதிகள்

வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை , பிஎஃப் திட்டத்திற்கு  வழங்கும்  பங்களிப்பு உள்பட  தொழிலாளர் விதிகளில் பல்வேறு மாற்றங்களை செய்து மத்திய அரசு வெளியிட்ட புதிய தொழிலாளர்  நல கொள்கைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.  


தொழிலாளர் நலன் தொடர்பான  கொள்கைகளில் 4 முக்கிய திருத்தங்களை செய்து மத்திய அரசு அண்மையில் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை  வெளியிட்டது.  பல மாதங்கள் பரிசீலனைக்குப் பிறகு மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதிகள் , இன்று முதல் ( ஜூலை 1 )  அமலுக்கு வருகிறது. இதன் மூலம்,   கூடுதல் வார விடு முறை, அதிகமான பிஎப் தொகை உள்ளிட்ட பல பலன்கள் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறும்.  

வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை: ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வருகிறது புதிய தொழிலாளர் விதிகள்

புதிய சட்ட விதிகளின் படி, “தற்போது பெரும்பாலான நிறுவனங்களிலும் வாரத்தில் 6 நாட்கள், தினமும் 8 மணிநேரம் வேலை நேரம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் வாரத்தில் 48 மணிநேரம் வேலை செய்கிறார்கள். தற்போது ஒரு வாரத்தில் 1 நாள் விடுப்பு உள்ளது.  இதற்கு மாற்றாக  நிறுவனங்கள் ஊழியர்களின் பணி நேரத்தை  8 முதல் 9 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரம் என அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால் அதை ஈடு செய்யும் வகையில் ஊழியர்களுக்கு 3 வார விடுமுறைகளை நிறுவனங்கள் அளிக்க வேண்டும். இதனால் தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் பார்க்கும் மொத்த வேலை நேரமும் மாறாது, அதேநேரம் ஊழியர்களுக்கும் கூடுதல் விடுப்பு கிடைக்கும்..   

வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை: ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வருகிறது புதிய தொழிலாளர் விதிகள்

அதேபோல் ஊழியர்கள் பெறும் சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனங்களின் பங்களிப்பு போன்றவற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும். புதிய விதிகளின்படி, ஊழியரின் அடிப்படை சம்பளம்,மொத்த சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும். இது வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும்.  அதாவது இதன் மூலமாக பிஎப் திட்டத்துக்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பு தொகை உயரும். இதனால் ஊழியர்களுக்கு கைகளில் கிடைக்கும் ஊதியம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஓய்வுக்குப்பின் பெறும் பணிக்கொடை அதிகரிக்கும். இதன் மூலம் ஓய்வுக்குப்பின் ஊழியர்கள் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.

வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை: ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வருகிறது புதிய தொழிலாளர் விதிகள்

 பணிக் காலத்தில் ஊழியர் எடுக்கும் விடுப்புகள் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓராண்டில் எஞ்சியிருக்கும் விடுப்பு நாட்களை அடுத்த பணி ஆண்டில் சேர்த்துக் கொள்வது, அதிக விடுப்பு பெறுவது போன்ற தளர்வுகள் செய்யப்படடு உள்ளன. ஆனால், ஓராண்டில் 180 நாட்கள் பணி செய்திருந்தாலே புதிய ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை மாற்றப்பட்டு, இனி அது 240 நாட்கள் என திருத்தம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில்  இந்தவிதிகள் கட்டாயம் அல்ல. நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே நெகிழ்வுத் தன்மையுடன் செயல்படுத்தலாம். புதிய தொழிலாளர் சட்டங்கள், நாட்டில் முதலீடுகளையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும்” என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.