மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை - 3 பேர் சுட்டுக் கொலை!

 
Manipur

மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்திற்கும், மெய்தி இன மக்களுக்கும் கடந்த மே மாதம் முதலே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த மோதல் வன்முறையாக மாறிய நிலையில், அந்த மாநிலமே போர்க்களமாக காட்சி அளித்து வருகிறது. வன்முறையால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயம அடைந்துள்ளனர். ஏராளமான பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கடந்த நில நாட்களுக்கு முன்னர் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. 

manipur

இந்த நிலையில், மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் வன்முறை வெடித்தது. மணிப்பூர் மாநிலத்தின் குவாக்டா பகுதியில் நேற்று இரவு திடீரென வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் மெய்தி இனத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறை மீண்டும் தலைதூக்கியுள்ளதால், இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்ப பெறப்பட்டுள்ளது.