குடும்ப உறுப்பினர்களின் கண் முன்னே கொள்ளையர்களால் கற்பழிக்கப்பட்ட 3 பெண்கள்!

 
rape

அரியானா மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்களின் கண் முன்னே 3 பெண்கள் கொள்ளையர்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு திடீரென ஒரு கொள்ளை கும்பல் புகுந்துள்ளது. அந்த கும்பல் பயங்கர ஆயுதங்கள் மற்றும் அரிவாள்களை கொண்டு அந்த குடும்ப உறுப்பினர்களை மிரட்டியுள்ளனர். மேலும் அந்த வீட்டில் உள்ள ஆண்களை ஆயுதங்களை காட்டி மிரட்டி கட்டிப்போட்டுள்ளனர். சத்தம் போட்டால் அனைவரையும் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். பின்னர் அந்த வீட்டில் உள்ள 3 பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த அந்த கும்பல், குடும்ப உறுப்பினர்களின் கண் முன்னே அவர்களை கற்பழித்துள்ளனர். 

rape

பின்னர் வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். கொள்ளையர்கள் அங்கிருந்து சென்றதும் கத்தி கூச்சலிட்ட நிலையில், அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவ்வித்தனர். சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். குடும்ப உறுப்பினர்களின் கண் முன்னே 3 பெண்கள் கொள்ளையர்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அரியானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.