குளக்கரையில் விளையாடிய 4 சிறுவர்கள் பரிதாப பலி
குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுமி மற்றும் ஒரு சிறுவன் தற்செயலாக குளத்தில் இறங்கி மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா அடுத்த கைக்கலூர் கிராமத்தில் இந்த பரிதாப சம்பவம் நிகந்திருக்கிறது.
கைக்கலூர் கிராமத்தின் குளத்தின் கரையோரம் மூன்று சிறுமிகளும் ஒரு சிறுவனும் விளையாடிக் கொண்டிருந்திக்கிறார்கள். அப்போது சிறுவர்கள் குளத்தில் எதார்த்தமாக இறங்க , அவர்கள் நீருக்குள் மூழ்கி போயிருக்கிறார்கள்.
தகவல் அறிந்து அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்க, தீயணைப்பு துறையினரும் கிராம மக்களும் சேர்ந்து குளத்தில் இறங்கி தேடியதில் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மூன்று சிறுமிகள், ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டு இருக்கிறது.
சம்பவம் குறித்து காவல்துறையினர் அப்பகுதி மக்களிடையே விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.