ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

 
kashmir

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இந்திய-பாகிஸ்தான் எல்லையோர பகுதியான காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கர வாதிகள் அவ்வபோது ஊடுறுவி வருகின்றனர். பயங்கர வாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காஷ்மீரின் குப்வாரா மச்சல் செக்டாரில் உள்ளா காலா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுறுவ முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து பாதுகாப்பு  படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 

kashmir

பாதுகாப்பு படை வீரர்களை பார்த்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.