உ.பி. துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து - 3 பேர் உயிரிழப்பு

 
rn

துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பதோகியில் துர்கா பூஜை நேற்று மாலை நடைபெற்றது. பூஜையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது . இரவு 9.30  மணி அளவில் ஆரத்தி  நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு கூடியிருந்த சுமார் 52 பேர் காயமடைந்தனர்.

yn

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து மீட்பு பணிகளை பார்வையிட மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  33 பேர் வாரணாசியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அத்துடன் பலர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் 45 வயதான ஒரு பெண் என மொத்தம் மூன்று பேர் சிகிச்சை பயணம் என்று உயிரிழந்துள்ளனர்.

tn

 இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் போலீசார் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர் . பூஜையில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு மூவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.