சரக்கு லாரி மீது மற்றொரு லாரி மோதி பயங்கர விபத்து - 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

 
accident

ஒடிசாவில் சரக்கு லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஒடிசாவின் ஜஜ்பூர் நகரில் இருந்து கொல்கத்தா நகரை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் 7 பேர் பயணித்தனர். இந்த லாரி ஜஜ்பூர் நகரின் தர்மசாலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட நியுல்பூர் பகுதியருகே தேசிய நெடுஞ்சாலை 16-ல் சென்றபோது, முன்னாள் சென்ற சரக்கு லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் லாரியில் பயணித்த 7 பேரில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் மேற்கு வங்க பகுதியை சேர்ந்தவர்கள் என காவல் உயரதிகாரி சஞ்சோய் பட்நாயக் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.