வெற்றிகரமாக 7 செயற்கைகோள்களும் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தம்..

 
வெற்றிகரமாக 7 செயற்கைகோள்களும்  சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தம்..

விண்ணில் செலுத்தப்பட்ட 23 நிமிடங்களுக்குள் ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட்டில் இருந்த 7 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து  காலை 6.30 மணிக்கு   PSLV-C56 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.  இந்த ராக்கெட்டானது  சிங்கப்பூர் நாட்டின் 360 கிலோ எடை கொண்ட  DS-SAR புவிநோக்கு செயற்கைகோள் உள்பட வெலாக்ஸ்-ஏஎம், ஆர்கேட், ஸ்கூப்II, கலாசியா - 2  மற்றும் ஓஆர்பி-12 ஸ்ட்ரைடர் உள்ளிட்ட  7 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

வெற்றிகரமாக 7 செயற்கைகோள்களும்  சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தம்..

மேலும் அரியலூர் விஞ்ஞானியின் 3 நானோ செயற்கைகோள்களைச் சுமந்து சென்றது. இதில், இடம்பெற்றுள்ள முதன்மை செயற்கைக்கோளான சிங்கப்பூர் நாட்டின்  DS SAR, சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய வகையிலும் இரவு, பகல் என அனைத்து பருவநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும். இந்த செயற்கைகோள் பூமியிலிருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுபாதையில் நிலைநிறுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி விண்ணில் செலுத்திய 23 நிமிடங்களில் அனைத்து செயற்கைகோள்களும் அதன் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.