மாமனாரை காதலித்து திருமணம் செய்துகொண்ட மருமகள்

 
b

மருமகளை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார் மாமனார்.   70 வயதான அந்த மாமனாரிடம் 28 வயதான மருமகள்தான் முதலில் காதலை சொன்னார் என்று சொல்கிறார் அந்த முதியவர் . உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது இப்படி ஒரு சம்பவம் .

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் சாபியா உம்ராவ் கிராமம்.   இக்கிராமத்தில் வசித்து வருகிறார் கைலாஷ் யாதவ்.  70 வயதான இந்த முதியவர் தனது மருமகளான 28 வயது பூஜாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.  

u

 கைலாச யாதவ் மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்திருக்கிறார்.   அந்த தம்பதிக்கு நான்கு பிள்ளைகள்.  மூன்றாவது மகனின் மனைவி தான் பூஜா. திருமணத்திற்கு பின்னர் பூஜாவின் கணவரும் சில ஆண்டுகளுக்கு பின்னர் உயிரிழந்திருக்கிறார்.   இதன் பின்னர் பூஜா வேறு ஒருவரை திருமணம் செய்திருக்கிறார்.

 இரண்டாவது திருமணத்தில் பூஜாவுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது .  இரண்டாவது கணவனை பிடிக்காததால் மனம் வெறுத்து முதல் கணவரின்  மாமனாரின் வீட்டிற்கு வந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.   அப்போதுதான் மாமனார் மீது பூஜாவுக்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது.   யாரையோ இரண்டாவது திருமணம் செய்வதை விட மாமனாரை திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.   இதன் பின்னர் மாமனாரிடம் தன் விருப்பத்தை  தெரிவித்திருக்கிறார் . அதற்கு சம்மதம் சொன்ன கைலாஷ்,  கோயிலில் வைத்து முறைப்படி மருமகளை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் .

தள்ளாத வயதில் தனக்கு துணையாக இருக்க வேண்டும் என்று,  தான் நினைப்பதாக கூறியிருக்கிறார் கைலாஷ்.  இந்த திருமணம் பற்றி பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில், குடும்பத்தினர் உறவினர்கள் முன்னிலையில்தான் நடந்துள்ளது இந்த திருமணம்.