சோனியாவை தொடர்ந்து பிரியங்கா காந்திக்கு கொரோனா!!
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 4,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 68 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 10 பேர் பலியாகியுள்ள நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,651ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் பிரியங்கா காந்தி தனிமைப்படுத்திக் கொண்டார். சோனியா காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரியங்கா காந்திக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்தி கடந்த வாரம் முழுவதும் பல்வேறு தலைவர்கள், செயற்பாட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு தொற்று உறுதியானதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.