ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து - காரணம் இதுதானாம்!!
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உலக நாடுகளில் கொரோனா உருமாற்றம் அடைந்து பரவிவரும் நிலையில் ஹாங்காங் நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் ஹாங்காங் செல்ல இரண்டு வார காலம் தடை விதிக்கப்பட்டது . இதையடுத்து ஒமிக்ரான் வைரஸை சுட்டி காட்டி இந்த தடைக்கு அமலுக்கு வந்த நிலையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ,பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் சேர்ந்து விமான பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியா வரும் பயணிகள் தங்கள் பயணத்திற்கு 48 நேரத்திற்கு முன்பாக பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதன் பின்னரே ஹாங்காங் வர அவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஏர் இந்தியா விமான சேவை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஹாங்காங் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விமான சேவையின் குறைந்த அளவிலான தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஹாங்காங்கிற்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுகிறது. நாளை மற்றும் 23ஆம் தேதி ஹாங்காங்கில் இருந்து நாடு திரும்பும் ஏர் இந்தியா விமான சேவையும் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.