தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார்.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் மற்றும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தும் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் பொதுமக்களும் , விளையாட்டு வீரர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தேசிய கொடியை சமூக வலைத்தளங்களின் பக்கங்களின் முகப்பு படங்களாக மாற்றி வருகின்றனர். அத்துடன் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தங்கள் இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.
#WATCH | Delhi: Union Home Minister Amit Shah and his wife Sonal Shah hoist the tricolour at their residence as the #HarGharTiranga campaign begins today. pic.twitter.com/nvxJTgK7nC
— ANI (@ANI) August 13, 2022
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார். அமித் ஷா தனது வீட்டின் மேல்தளத்திற்கு சென்று, நாட்டின் மூவர்ண கொடியை உயர ஏற்றினார். அவரது மனைவி சோனல்ஷாவும் உடன் இருந்து கொடியேற்றினார்.