#Election Breaking : குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தக்கவைத்த பாஜக

 
bjp

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் கிட்டத்தட்ட 150 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள பாஜக, அம்மாநிலத்தில் ஆட்சியை தக்கவைப்பதை உறுதி செய்துள்ளது. 

182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு கடந்த ஒன்றாம் தேதி மற்றும் ஐந்தாம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், தொடக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 92 இடங்களில் வெற்றி பெற்றால் பெரும்பான்மைக்கு போதுமானதாகும். ஆனால் பாஜக தற்போது 149 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், குஜராத்தில் பாஜக வெற்றி உறுதியாகியுள்ளது. 

கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜக 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக இந்த முறை அசுர பலத்துடன் முன்னிலையில் உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலம் முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடித்தும், மேள தாளங்களை இசைத்தும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ் 22 தொகுதிகள், ஆம் ஆத்மி 6, சுயேட்சைகள் 3, சமாஜ்வாதி 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. 149 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்துள்ளது.