குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் பொறுப்பேற்பு - அதிகாரிகள் வாழ்த்து

 
 Bhupendra Patel

குஜராத் முதல்வராக நேற்று பதவியேற்ற பூபேந்திர பட்டேல் காந்தி நகரில் உள்ள அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் சட்டமன்றத் தேர்தல் கடந்த டிசம்பர் 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக நடைபெறது. வாக்கு எண்ணிக்கை கடந்த 8ம் தேதி நடைபெற்ற நிலையில்,  மொத்தம் உள்ள 182 இடங்களில் 156 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து பாஜக ஏழாவது முறையாக மீண்டும் குஜராத் மாநிலத்தை ஆளும் அதிகாரத்தை பெற்றது. பூபேந்திர படேல் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நிலையில்,  காந்தி நகரில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பூபேந்திர பட்டேல் இரண்டாவாது முறையாக குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக முத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.  


குஜராத் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பூபேந்திர பட்டேல் காந்தி நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு பாஜகவினர் மற்றும் அதிகாரிகள் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.