6 வயது சிறுவனின் ஒப்பந்தம் - அழாமல் இருந்தால் ரூ.100 பரிசு தரும் தந்தை!
நாள்முழுவதும் அழாமல் இருந்தால் தன்னுடைய 6 வயது மகனுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்ற தந்தையின் வேடிக்கையான ஒப்பந்தம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தைகள் குறித்து வீடியோவோ, புகைப்படமோ, மீம்களோ வெளியானாலும், அது உடனடியாக வைலாகி விடும். ஏனென்றால் குழந்தைகளின் குறும்பு தனம் ,அடம்பிடிப்பது ,எதற்கெடுத்தாலும் அழுவது உள்ளிட்டவை பார்ப்பதற்கும் ,கேட்பதற்கும் ரசனை மிகுந்ததாக இருக்கும். அப்படி 6 வயது சிறுவனுக்கான ஒப்பந்த கடிதம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Me and my 6 year old signed and agreement today for his daily schedule and performance linked bonus 😂 pic.twitter.com/b4VBKTl8gh
— Batla_G (@Batla_G) February 1, 2022
அதில் சிறுவன் எழுந்து கொள்ளும் நேரம், அலாரம் அடிப்பதற்கு முன்பு எழுதிட வேண்டும், டிவி பார்க்கும் நேரம், பால் குடிக்க அடம் பிடிக்கக் கூடாது உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கி ஒப்பந்தம் போடப்பட்டு, அதில் சிறுவன் கையெழுத்திடப்பட்டு உள்ளது போல புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. அதில் சரியாக உணவு சாப்பிடுவதற்கு எத்தனை மணிநேரம், டிவி பார்ப்பது எவ்வளவு நேரம், எப்போது விளையாட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், வீட்டு வேலைகளில் தனது அம்மாவுக்கு உதவி செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஹைலைட் என்றால், நாள் முழுவதும் எதற்கும் அழாமல், கோபப்படாமல் இருந்தால் அந்த சிறுவனுக்கு அவரது தந்தை 7 நாட்களுக்கு சேர்த்து ,100 ரூபாய் வெகுமதியாக வழங்குவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெற்கெல்லாம் ஓகே சொல்லி சிறுவனும் அதில் கையெழுத்திட்டுள்ளார் . இது வியப்பூட்டும் வகையில் இருந்தாலும், இப்படிப்பட்ட கட்டுபாடுகளுடன் கூடிய அட்டவணையை சிறுவர்கள் பின்பற்றும் பட்சத்தில் அவர்களுக்கு மனப் பதற்றம் ஏற்படும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.