ராஜீவ் காந்தி நினைவு தினம் : முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை..
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி ஊட்டியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்பத்தூரில் 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதன்படி இன்று ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் வீர் பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோரும் உடனிந்தனர்.
இதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி, அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். ஊட்டியில் உள்ள அவரது சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். உதகையில் நடைபெறும் மலர்க்கண்ட்காட்சி உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக உதகை சென்றுள்ள அவர், அங்கேயே ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.