பாடகர் கே.கே.வின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை!!

 
tn

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத்  மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  தமிழில் 'காக்க காக்க' படத்தில் உயிரின் உயிரே,  'அந்நியன்'  படத்தில் அண்டங்காக்கா கொண்டைக்காரி , , 'மன்மதன்' படத்தில் காதல் வளர்த்தேன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்த இவர் இறுதியாக தமிழில்  லெஜெண்ட் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை பாடினார். 

tn

இந்த சூழலில் கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் கே.கே. என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னாத்  மறைவுக்கு அரசியல் தலைவர்கள் ,திரைப் பிரபலங்கள் என பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  அத்துடன் அவரது மரணம் சந்தேகத்திற்குரிய மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் கொல்கத்தாவில் மரணமடைந்த பாடகர் கே.கே.வின் உடலுக்கு, விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.