புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி

 
pondy

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. 
 
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ம் தேதி காலை 9:30 மணிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் துணைநிலை ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, புதுச்சேரி அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால், சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாகவும், ஆளுநர் உரையின் மீதான விவாதம் வேறு தேதியில் நடைபெறும் எனவும் சட்டப்பேரவை தலைவர் செல்வம் அறிவித்தார்.

pondy

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 11 ஆயிரம் கோடிக்கு வரையறை செய்து கோப்பு அனுப்பிய நிலையில், 10 ஆயிரத்து 696 ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் புதுச்சேரி சட்டப்பேரவையில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.