மறுபிறவி எடுக்க கல்லூரி மாணவர் தீக்குளிப்பு! ‘அருந்ததி’அனுஷ்கா போல் பாவித்துக் கொண்டவருக்கு நேர்ந்த கதி
அருந்ததி படத்தில் உயிரிழந்த அனுஷ்கா மறுபிறவி எடுத்து வருவது போல் தானும் உயிரிழந்து விட்டால் மறுபிறவி எடுத்து வரலாம் என்று நினைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துக் கொண்ட கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். கல்லூரி மாணவர் இப்படி ஒரு செயலை செய்து கர்நாடக மாநிலத்தில் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் துமகூர் மாவட்டம் கொண்ட வாடி கிராமம் . கிராமத்தைச் சேர்ந்த ரேணுகா பிரசாத் என்கிற 22 வயது இளைஞர் பியூ சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
கல்லூரி மாணவரான ரேணுகா பிரசாத் திரைப்படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களை போலவே தன்னை பாவித்து கொண்டும் வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் அனுஷ்காவின் நடித்த அருந்ததி படத்தை அடிக்கடி பார்த்து வந்திருக்கிறார். அப்படத்தில் அனுஷ்கா தலையில் தேங்காய்களால் அடித்து உயிரை மாய்த்துக் கொண்டு பின்னர் மறுபிறவி எடுத்து வருவது போல் தானும் உயிரிழந்தால் மறுபிறவி எடுத்துவிடலாம் என்று நினைத்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இருக்கிறார்.
இதில் உடல் முழுவதும் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அப்பகுதி மக்கள் மீட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேணுகா பிரசாத் உயிரிழ்ந்தார். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் நடத்தி வருகின்றனர்.
தீக்குளித்து உயிருக்கு போராடிய போது மகனின் நிலைமையை பார்த்து தன் தந்தை கண்ணீர் விட்டு அழுத போது, எனக்கு முக்தி கொடுங்கள் முக்தி கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டு இருக்கிறார் . அதற்கு தந்தை, நான் உன்னை அருந்ததி படம் பார்க்க வேண்டாம் என்று சொன்னேன். நீ கேட்கவில்லையே... கடைசியில் இப்படி ஆகிவிட்டது . நான் எப்படி உனக்கு முக்தி கொடுக்க முடியும்.. நான் எப்படி உனக்கு முக்தி கொடுக்க முடியும் என்று கதறி அழுதிருக்கிறார்.
திரைப்படத்தை பார்த்துவிட்டு கல்லூரி மாணவர் மறு பிறவி எடுக்கிறேன் என்று தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது.