ஜேஎன்யு மாணவர்களிடையே மோதல்.. - ராமநவமி அன்று அசைவ உணவு சாப்பிட்டதால் வன்முறை..

 
 ஜேஎன்யு மாணவர்களிடையே மோதல்.. -  ராமநவமி அன்று அசைவ உணவு சாப்பிட்டதால் வன்முறை..  ஜேஎன்யு மாணவர்களிடையே மோதல்.. -  ராமநவமி அன்று அசைவ உணவு சாப்பிட்டதால் வன்முறை..

ராமநவமியை ஒட்டி  டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிடும் விவகாரத்தில்  மாணவர்கள் மற்றும்  ஏபிவிபி மாணவர் அமைப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.  

நாடு முழுவதும் நேற்று  ராமநவமி விழா கொண்டாடப்பட்டது.  இதையொட்டி  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்து அமைப்பு மாணவர்கள் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் பல்கலைக்கழக வளாகத்ஹ்தில் உள்ள விடுதியில் அசைவ உணவு வழங்கக்கூடாது என  ஆர் எஸ் எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்  உறுப்பினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அத்துடன்  சில மாணவர்கள் விடுதியில்  அசைவ உணவு உண்ணும் போது,   அங்கு சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். விடுதி செயலாளரையும் தாக்கி, இரவு உணவு மெனுவை மாற்ற வேண்டும் எனவும், அசைவ உணவு வழங்க கூடாது என்றும்  வற்புறுத்தியுள்ளனர்.  

 ஜேஎன்யு மாணவர்களிடையே மோதல்.. -  ராமநவமி அன்று அசைவ உணவு சாப்பிட்டதால் வன்முறை..

இது ஜனநாயக விரோத செயல் எனவும், உணவு அவரவர் தனிப்பட்ட உரிமை எனக்கூறி  இடதுசாரி மாணவர் அமைப்பினரும்  தாக்கியுள்ளனர்.  இதனையடுத்து  இடதுசாரி அமைப்பு மாணவர்களுக்கும் ஏபிவிபி மாணவர்களுக்கும் இடையேயான  மோதல் வன்முறையாக வெடித்தது.   இந்த கடுமையான தாக்குதலில் 60 பேர் காயம் அடைந்ததாக மாணவர்கள் கூறினர். ஆனால்  6  பேர் மட்டுமே  காயமடைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜேஎன்யு மாணவர்களிடையே மோதல்.. -  ராமநவமி அன்று அசைவ உணவு சாப்பிட்டதால் வன்முறை..

ஆனால்  அசைவ உணவு சாப்பிட்டதால் மோதலில் ஈடுபடவில்லை என ஏபிவிபி மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  ராமநவமி பூஜைக்கு ஏற்பாடு செய்ததாகவும், அதற்கு  இடதுசாரி மாணவர்கள் தெரிவித்த எதிர்ப்பே மோதலுக்கு காரணம் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.  மாணவர்கள் அமைப்பினரிடையே  ஏற்பட்ட மோதலால் டெல்லி  ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் இருந்து வருகிறது.  இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளாமான காவல் துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.