டெல்லியில் இன்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டம்..

 
சோனியா காந்தி - ராகுல் காந்தி

டெல்லியில் இன்று காங்கிரஸ் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெறுகிறது.  

ராகுல் காந்தி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,  3 நாட்களாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.   வேண்டுமென்றே அமலாக்கத்துறை ராகுல் காந்தியை அலைக்கழிப்பதாக  அக்கட்சியினர்  குற்றம் சாட்டி வருகின்றனர்.  அத்துடன் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான நாள் முதல் காங்கிரஸ்  அமலாக்கத்துறை அலுவலகங்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அந்தவகையில் ராகுல் காந்தி எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து,  போராட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பிக்கள் மீது டெல்லி காவல் துறையின தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

ராகுல், சோனியா காந்தி

 இந்த நிலையில் இன்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.  இன்று காலை நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்களை,  டெல்லி காவல்துறை நடத்தும் விதம் விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் டெல்லி காவல்துறையினர் காங்கிரஸ் தாக்குவதாக,  சபாநாயகரை சந்தித்து புகார் அளிக்கவும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான குழு,   சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து புகார் அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.