கன்னி மேரி, துர்கா சிலைகள்.. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பர்தா அணிந்த இளம் பெண்கள்

 
ds

கன்னி மேரி,  துர்கா சிலைகளை சேதப்படுத்திய பர்தா அணிந்த இரண்டு இந்த இளம் பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.   அவர்கள்  விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  இருவரும் சகோதரிகள் என்று தெரியவந்திருக்கிறது.

 தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்.  ஹைதராபாத்தில் இருக்கும் கைரதாபாத் என்கிற பகுதியில் உள்ள தேவாலயத்தின் வாசலில் இருந்த கன்னி மேரி சிலை சேதப்படுத்தப் பட்டு உள்ளது.   இதற்கு சற்று தூரத்தில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலையும் சேதப்பட்டுள்ளது.

ds

 பர்தா அணிந்த இரண்டு இளம் பெண்கள் இந்த சிலைகளை சேதப்படுத்தி உள்ளனர்.   இது குறித்து போலீசுக்கு புகார் செல்லவும்,  போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பர்தா அணிந்த அந்த இரண்டு இளம் பெண்களையும் கைது செய்துள்ளனர்.  அவர்கள் இருவரும் சகோதரிகள் என்று தெரிய வந்திருக்கிறது.

சகோதரிகள்  இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   சகோதரிகள் இருவரும் மனநிலை சரியில்லாதவர்களாக இருக்கலாம் என்று போலீசார்  சந்தேகிக்கின்றனர். 

 இதற்கிடையில் சேதப்படுத்தப்பட்ட கன்னி மேரி மற்றும் துர்கா  சிலைகள் உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளன.   இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.