வாக்காளர் பட்டியலில் டெல்லி காங்கிரஸ் தலைவர் பெயர் இல்லாததால் பரபரப்பு

 
delhi

டெல்லி மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க சென்ற காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். 

250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. கடந்த தேர்தலில் பா.ஜ.க. மாநகராட்சியைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடதக்கது. வரும் 7ம் தேதி வாக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அன்றைக்கே முடிவு அறிவிக்கப்படவுள்ளது.  

இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க சென்ற காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வாக்காளர் பட்டியலில் மனைவி பெயர் உள்ளது, ஆனால் தனது பெயர் இல்லை என தேர்தல் பணியார்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து டல்லுபுராவில் உள்ள வாக்குச்சாவடி சென்று காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி வாக்களித்தார்.