ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்ற அமலாக்கத்துறை

 
rahul

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும் படி அமலாக்கத்துறைக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியிருந்த நிலையில், அவரது கோரிக்கையை ஏற்ற அமலாக்கத்துறை திங்கள் கிழமை ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவியது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. இந்த பத்திரிக்கையின் பங்குகளை ,   சோனியாவும், ராகுலும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் உள்ள பங்குதாரர்களின் ஒப்புதலை  பெறாமல் மாற்றப்பட்டதாக புகார் எழுந்து. இதனையடுத்து  சோனிய மற்றும் ராகுல் காந்தி மீது  பாஜ தலைவர் சுப்பிரமணிய சுவாமி,   டெல்லி  உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை தற்போது  அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராக்குல் காந்தி ஜூன் 13 ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. 

ed

இதனை தொடர்ந்து ராகுல் காந்தி கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.  
யங் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்ட விதம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை இயங்கிய விதம், காங்கிரஸ் கட்சி கொடுத்த நன்கொடை பங்குகள் மற்றும் யங் இந்தியா தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.  கடந்த 3 நாட்களாக 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்றும் விசாரணைக்கு ஆஜர் ஆகும் படி ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், தனது தாய் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை அங்கிருந்து கவனித்துக்கொள்வதற்கு ஏதுவாக இன்றைய விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறு ராகுல் காந்தி அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதிலாக திங்கள் கிழமை தனது விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில், அவரது கோரிக்கையை அமலாக்கத்துறை ஏற்றுக் கொண்டுள்ளது. வருகிற திங்கள் கிழமை வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.