இன்று நடக்கிறது குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு!

 
jee exam

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும்  குடிமைப் பணிகளுக்கான  முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது.

police exam

நாடு முழுவதும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் 20 குடிமைப் பணிகளுக்கான 1,011 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 பணிகளுக்கான தேர்வு , இன்று 77 இடங்களில்  நடைபெறுகிறது. குடிமைப் பணி  தேர்வுகள் முற்பகல், பிற்பகல் என இரண்டு வேளைகளில் காலை 9:30 முதல் 11:30 மற்றும் 2:30 முதல்  4:30 வரை  நடைபெறுகிறது. 

exam

சென்னையை பொறுத்தவரை குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வினை 68 தேர்வு மையங்களில் 25 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். புதுச்சேரியில் 9 மையங்களில் தேர்வு நடைபெறும் நிலையில் 3,115 பேர் எழுதுகின்றனர். தேர்வில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அணியாதவர்களுக்கு அனுமதி இல்லை என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.