போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - புதுச்சேரி அரசுக்கு எச்சரிக்கை!!

 
tn

புதுச்சேரியில் போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஓடவில்லை. 

tn

 கடந்த இரண்டு ஆண்டுகளாக போனஸ் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரி போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளிக்கு போனஸ் வழங்கவில்லை என்று தெரிகிறது. எனவே போனஸ் வழங்க கோரி  அரசு பேருந்து ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் , அரசு அதைக் கண்டு கொள்வதாக தெரியவில்லை . இதையடுத்து உடனடியாக போனஸ் வழங்ககோரியும், புதுச்சேரி அரசின் செயலை கண்டிக்கும் வகையிலும்  பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

puducherry

இந்நிலையில்  இன்று அடையாள நிமித்தமாக ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகர மற்றும் தொலைதூர பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும்  புதுச்சேரியில் தமிழ்நாடு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வதால்  மக்களுக்கு பெரியளவில் சிரமம் ஏதுமில்லை. இருப்பினும் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் முற்றிலும் இன்று இயக்கப்படவில்லை போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்கா பட்சத்தில் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.