என்டிடிவி செய்தி நிறுவனத்தின் 30% பங்குகளை வாங்கியது அதானி குழுமம்!

 
adani

இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 30 சதவீதப் பங்குகளை அதானி குழுமம் வாங்கியது.

Adani forays into news channel space; to buy majority stake in NDTV

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின்பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர்.

அதானி தன்குழுமத்தை விரிவாக்கும் பொருட்டு புதிதாக பல தொழில்களிலும்முதலீடு செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற 5ஜி ஏலத்தில் அதானி நெட்வோர்க் என்கிற புதிய நிறுவனம் பங்குபெற்றது.

மேலும், அதானிஒடிசா மாநிலத்தின் ராயகடா பகுதியில்அலுமினிய சுத்திகரிப்பு ஆலையைஅமைப்பதற்காக அம்மாநில அரசிடம் உரிமம் பெற்றதுடன் ரூ.41,000 கோடியை அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின்இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 29.18சதவீதப் பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கை கையகப்படுத்தியுள்ளதால்நிர்வாக முடிவுகளைக் எடுக்கக் கூடிய பங்குதாரராகவும் அதானி குழுமம் செயல்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.