சுதந்திர தினம் - எல்லையில் இனிப்பு பரிமாறி கொண்ட இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள்

 
india pakistan

நாட்டின்  75வது சுதந்திர நாளையொட்டி சர்வதேச எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார்.  அப்போது விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டது. செங்கோட்டையில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக தேசிய கொடி ஏற்றி உரையாற்றினார். பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படை தளபதிகள், உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர், பல்வேறு நாடுகளின் தூதர்கள் ,அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டரும் பங்கேற்றனர்
 
இந்நிலையில், நாட்டின்  75வது சுதந்திர நாளையொட்டி சர்வதேச எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஆர்.எஸ். புரா சர்வதேச எல்லையில் இன்று காலை எல்லைப் பாதுகாப்புப் படையினரும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.