இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,574 பேருக்கு கொரோனா

 
corona

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,574  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், நேற்று அதிகரித்தது. நேற்று முன் தினம் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 2,208 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,574  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரத்து 662  ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,29,008 ஆக உயர்ந்தது.
 
கடந்த 24 மணி நேரத்தில் 2,161 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை   4 கோடியே 41 லட்சத்து 2 ஆயிரத்து 852 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை  18 ஆயிரத்து 802 ஆக குறைந்துள்ளது.  நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை  219.62 கோடியை தாண்டியுள்ளது.