இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,141 பேருக்கு கொரோனா

 
corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களை விட அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி வந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 1,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,46,36,517  ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 20 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,943  ஆக உயர்ந்தது.

Covid Positive


 
கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  4,40,82,064 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை  25,510 ஆக குறைந்துள்ளது. நாட்டில் நேற்று ஒரே நாளில் 4,90,711 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை  219 கோடியை தாண்டியுள்ளது.