இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,529 பேருக்கு கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட சற்று அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 2,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,46,04,463 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 12 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,745 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,553 பேர் குணமடைந்த நிலையில், நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,43,436 ஆக உள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 32,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79,366 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 2,18,84,20,182 ஆக அதிகரித்துள்ளது.