இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,272 பேருக்கு கொரோனா

 
Covid india

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களை விட அதிகரித்துள்ளது.  நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம்  3,230  பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று 3,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  4 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 27பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை   5 லட்சத்து 28 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது.  

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,474 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து13 ஆயிரத்து 999 பேர் ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது வரை  40,750 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் நேற்று ஒரே நாளில் 21.63 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 218 கோடியாக அதிகரித்துள்ளது.