நீண்ட நாட்களுக்கு பிறகு 5000 ஆக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

 
corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு 5000 ஆக குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்  5,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 27ம் தேதி  9,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் 9,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் நேற்று 7,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு 5000 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 5,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,44,21,162 ஆக அதிகரித்துள்ளது.   

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22,031 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,25,024 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது  65,732 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாட்டில் இதுவரை 212.17 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.