நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,219 பேருக்கு கொரோனா

 
india corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட சற்று அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த நில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று  6 ஆயிரத்து 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 7,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,44,49,726 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 33 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,27,965 ஆக அதிகரித்துள்ளது.  

corona

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,651 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை4,38,65,016 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது  56,745 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் நாட்டில்  25,83,815 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 2,13,01,07,236 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல்ல் நேற்று ஒரே நாளில் 3,64,886 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,68,31,141 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.