இறங்குமுகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் இதோ!

 
corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் 11,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்  நேற்று  9,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று,   8,586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 48 பேர் உயிரிழந்த நிலையில்,  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  5,27,416 ஆக அதிகரித்துள்ளது. 

corona

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  9,680 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  4 கோடியே 37 லட்சத்து 33 ஆயிரத்து 624 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது  96,506 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 29.25 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 210 கோடியாக அதிகரித்துள்ளது.