நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,436 பேருக்கு கொரோனா

 
corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 9,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 9,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றை விட பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  4 கோடியே 37 லட்சத்து 93 ஆயிரத்து 787 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது 86 ஆயிரத்து 591 பேர் பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாட்டில் இதுவரை 211 கோடியே 66 லட்சத்து 35 ஆயிரத்து 408 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது